முக்கிய செய்திகள்

Tuesday, November 8, 2011

..சொல்லாததும் உண்மை...............


..சொல்லாததும் உண்மை

    

     "பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதேமாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள்ஏனென்றால்பொய் உன்னை வாழ விடாதுஉண்மை உன்னை சாக விடாது", என்றார் விவேகானந்தர்.

     இன்று நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால், உண்மையை எப்படி எதிர்கொள்வது என்பதே. உண்மை பேசுவது என்பது அவ்வளவு எளிதானது அன்றோஇந்த உலகத்தில் சொல்ல மறுக்கிற விஷயங்களும்சொல்லாமல் மறைக்கிற வீஷயங்களும் மட்டுமே தற்போது உண்மையாக இருக்கின்றன.உண்மை பேசுகிறவன் பலர் பார்க்க கயிற்றின் மேல் நடக்கிறவன் போலஎல்லாருக்கும் அந்த தைரியம் வந்துவிடாதுஆனால்,அவனது செய்கையை வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள்.மேற்கொண்டு அவனுக்கு எதுவும் கிடைக்காது!

     மௌனத்தை வார்த்தைகளால் என்றுமே வெல்ல முடியாது.ஏனென்றால் மௌனம் என்பதுதான் உண்மைவார்த்தைகளால் மௌனத்தை விளக்க முடியும்ஆனால்நம்மால் என்றுமே மௌனத்தை உருவாக்க முடியாதுமௌனம் சில நேரங்களில் தண்டனைசில நேரங்களில் மன்னிப்பு!

    நிர்வாணமே உண்மைஆனால்நம்மால் அந்த நிர்வாணத்தை எதிர்கொள்ள முடியுமாஎதிர்க்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லைஅதை ஒப்புக்கொள்ளவாது முடியுமாஇந்த உலகத்தில் சொல்லாமல் போகின்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் போவதில்லை
          
    வாழ்க்கை அபூர்வம் என்றால்அதை அணு அணுவாக வாழ்பவன்அபூர்வங்களின் அபூர்வம்அப்படி ஒரு அபூர்வக் கலைஞன் தான் "பிரகாஷ்ராஜ்". அவரது "...சொல்லாததும் உண்மைஎன்கிற தொடர் ஆனந்த விகடனில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வந்துபிறகு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.  உண்மையை சொல்வதே தைரியமான விஷயம் என்றால்ஒரு ஊடகத்தின் வாயிலாக உண்மையை உரக்க சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!

     தாயன்புகாதல்காமம்நம்பிக்கைநம்பிக்கை துரோகம்,நட்புதிமிர்கர்வம்பயம், பிரிவு என ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதைகளை உண்மையாக திரும்பி பார்க்கிற தைரியம் எல்லாருக்கும் வந்துவிடாதுஒரு விஷயத்தை உண்மையாக பார்ப்பதற்கும்நமக்கு வசதியாக பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளதுபிரச்சனை என்னவென்றால்நமக்கு எது வசதி என்பதில்எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.



    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்எந்த மனிதனும் காமத்துடனான தன் அனுபவத்தை எவரிடமும் அவ்வளவு எளிதில் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்காந்தி  தன் தந்தை இறக்கும் தருவாயில்தன் உடல் பசியை தீர்க்க தன் மனைவியை அழைத்ததையும்தனது வயதோகிய காலத்தில் தன் துறவர வாழ்க்கையின் மீது தானே சந்தேகம் கொண்டு சுயபரிசோதனை செய்து கொண்டதையும் இந்த உலகத்துக்கு வெளிப்படையாக சொன்னார்அதே துணிச்சலை பிரகாஷ்ரஜிடமும் பார்க்கிறேன்.

    சகமனிதனின் அனுபவம் தானே நமக்கு வாழ்க்கை பாடம்?  

நூல் விவரம்:- 
பெயர்: ...சொல்லாததும் உண்மை
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ்
வெளியீடு: விகடன் பிரசுரம்

No comments:

Post a Comment