ஏழை, பணக்காரன்
அறிவாளி, முட்டாள்
உயர்ந்தவன், தாழ்ந்தவன்
என எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்குமான காரணத்தை வாழ்க்கை மறைத்து ஐந்து இரும்புக் கதவுகளுக்குள் வைத்துப் பூட்டிவைத்திருக்கிறது.
இந்தக் கதவைத் திறந்து பார்த்தவர்கள் மட்டுமே திரும்பிப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள்!
வியாபாரியின் பார்வைபட்ட பின்
குப்பை கூட பணமாகிவிடுகிறது!
குட்டிக்கரணம் போடுவதால்
குரங்கு கூடத் திரும்பிப்பார்க்கப்படுகிறது!
முன்னோருக்கு உணவுபடைக்க
காக்கை கூட அதன்மொழியில் அழைக்கப்படுகிறது!
கடையில் லாபம் பெறுக
கழுதைகூட நிழற்படமாகிவிடுகிறது!
ஏதோ புரிந்துகொண்டிருக்கின்றன..
இல்லையென்றால்..
நமக்கு ஏதோ புரியவைக்க முயற்சிக்கின்றன.
விலைமதிப்பில்லாத
இந்த இயற்கைக் கூறுகள் கூட
தேவை, தனித்தன்மை காரணமாக
விலை மதிக்க முடியாதவையாக ஆவிடுகின்றன!
விலை மதிக்கமுடியாத மனிதன் மட்டும்
தன்னை உணர்ந்துகொள்ளாததால்
விலை மதிப்பே இல்லாதவனாகிவிடுகிறான்!!
அதனால்..
கொம்பை மறந்த மாடுபோல
துயர வண்டி இழுக்கிறான்!
மந்தையில் பிரிந்த ஆடுபோல
திருதிருவென விழிக்கிறான்!
தாயின்றி அழும் குழந்தைபோல
அழுது தவிக்கிறான்!
எத்தனையோ பேர் வாழ்க்கையின் இந்த மறைபொருளை அறிந்து, உணர்ந்து சாதித்திருக்கிறார்கள்..
இன்னொருவன் உண்பதால் நம் பசி தீராது!!
நாமே உழைப்போம்..
உடலால் உழைத்து உழைத்து மாடாகியது போதும்!!
அறிவால் உழைத்து உலகாளுவோம்!!
இதோ மறைபொருள் திறக்க ஐந்து திறவுகோல்கள்!
1. நான் ஏன் பிறந்தேன்?
2. என் தனித்தன்மை என்ன?
3. நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
4. நான் ஏன் இவர்களோடு இருக்கிறேன்?
5. நான் ஏன் இன்னொருவர் சென்ற பாதையில் செல்லவேண்டும்?
இந்தக் கேள்விகளே நான் உங்களுக்குத் தரும் திறவுகோல்கள்!!
என்ன நண்பர்களே மறைபொருள் தெரிகிறதா..??
No comments:
Post a Comment