முக்கிய செய்திகள்

Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Monday, April 30, 2012

சுட்ட கதை சுடாத நீதி

பிரபல வழக்கறிஞர் ஒருவர் மகிழ்ச்சியிலும், குழப்பத்திலும் மூழ்கி இருந்தார். மகிழ்ச்சிக்கு காரணம் ஒரு வழக்கில் கிடைத்த வெற்றி. நகரின் மிக பெரிய பணக்கார நண்பர், தன் இறந்து போன தந்தை சொல்லாமல் விட்டுப்போன சொத்துக்கள் எங்கெங்கு இருக்கின்றன என தேடுவதிலேயே பாதி காலத்தை கழித்தவர். 

ஒருவாராக பல கோடி ருபாய் மதிப்புள்ள நிலம் அவர் தந்தை வாங்கி இருப்பினும், அது மற்றொருவரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. 

அதை மீட்பதற்காக போட்ட வழக்கில், இன்று தான் அந்த தொழிலதிபருக்கு சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது. அதை குறித்தே வழக்கறிஞருக்கு மகிழ்ச்சி.

குழப்பத்துக்கு காரணமும் இந்த வழக்கு தான். 

'சொத்து பிரச்சனைக்காக ஊர் ஊராக அலைந்து கொண்டு இருப்பதால், இந்த வழக்கை முழுதாக நீயே பார்த்துக்கொள்'
என நண்பரான வழக்கறிஞரை அவர் அன்புடன் கேட்டுகொண்டிருந்தார். 

அதனால் பீஸ் நயா பைசா கூட வாங்கவில்லை. இப்போது ஜெய்த்த பின் நண்பர் தருவாரா? நட்புக்காக இலவச சேவை செய்ததாக நினைத்து கொள்வாரா? என்று குழப்பம்.

வெற்றி தகவலை சொன்னதும், அன்றிரவே வழக்கறிஞரை பார்க்க வந்த தொழிலதிபர், அழகான ஒரு பொம்மையை பரிசாக தந்தார்.

'இது லண்டனில் வாங்கியது. பொம்மை மாதிரி குழந்தைகள் விளையாடலாம், சேமிக்கவும் உண்டியலை பயன்படுத்தலாம்'

'என்னய்யா இது விளையாட்டு? உனக்காக நான் பல கோடி ரூபாய் சொத்தை வாதாடி மீட்டு தந்திருக்கிறேன். நீ என்னவென்றால் ஒரு பொம்மையை தருகிறாய். வெளி ஆளாக இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் பீஸ் வாங்கி இருப்பேன் தெரியுமா? என கொதித்தார்.

தொழிலதிபரின் முகம் சுருங்கியது. அந்த உண்டியல் பொம்மையை வாங்கி திறந்தார். 
'இதுக்குள்ள பத்து லட்சம் ரூபாய் வைத்திருந்தேன். திறந்து கூட பார்க்காமல் ஆத்திரப்பட்டீங்க. இப்போ நீங்க சொன்னபடி ஐந்து லட்சம் நான் எடுத்துக்கறேன். உங்க பீஸ் ஐந்து லட்சம் உள்ள இருக்கு' என சொல்லலி பொம்மையை கொடுத்துவிட்டு வெளியேறினார்.

பணம் இழந்ததோடல்லாமல் நல்ல நட்பையும் தொலைத்துவிட்டு நின்றார் வழக்கறிஞர்.

நீதி:

அவசரத்தில் பேசும் வார்த்தைகள்தான் நட்பை முறிக்கின்றன.