முக்கிய செய்திகள்

Tuesday, November 8, 2011

யார் பிக் பாஸ்?


யார் பிக் பாஸ்?


உடல், ஆன்மா, மனம் ஆகியவைகளின் மொத்த கலவைதான் உயிருள்ள மனிதன். இவற்றில் ஏதாவது ஒன்று தனக்கு தேவையில்லை என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. அப்படி சொல்வானானால் அவன் மனிதனாக இருக்க முடியாது. பிறக்கும்போதே இவை நம்முடன் வருபவை. இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்று நினைக்கிறேன்.
சரி அதற்கென்ன இப்போ என்கிறீர்களா?
இந்த மூன்றில் யார் பிக் பாஸ் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியதால் சிந்தனை குதிரையைத் தட்டி விட்டேன்.
இதைப் பற்றி எழுதுவதற்கு முன் இவை குறித்த எனது தேடல் நீண்டது. வளைத்தளம், வளைப்பூக்கள் என தேடி பார்த்தேன். இருப்பினும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. எனக்குள் தேட முயன்றபோது கிடைத்ததை பதிவு செய்கிறேன்.
ஒன்றை விட்டு இன்னொன்று இயங்க முடியாது என்பது இந்த மூன்றுக்கும் தெரியும்அப்படியிருக்கையில்தேவையா இப்படியொரு விபரீத போட்டிஎன்கிறீர்களா?
போட்டி என்று வந்து விட்ட பிறகு இனிமேல் என்னசெய்வது?
ஆன்மாமனம் ஆகியவற்றால் இயக்கப்படுவதால் மனித உடல் சற்று பலவீனமானவனாக எனக்கு தெரிகிறது.
மற்ற இரண்டும் சற்று பலம் பொருந்தியதாகவும்,ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இருக்கின்றன.
இரண்டும் மனிதனுக்குள் இருந்து செயல்பட்டுகொண்டிருப்பவைஇவற்றில் முழு முதற்காரணமாகவிளங்குவது மனம்இதைப் பற்றிக் கூற வேண்டுமானால்,மிகவும் வேகமாக செயல்படக் கூடியதுகுப்பைகளைகொட்டுவதைப் போல நொடிக்கொரு தரம் எண்ணங்களைபிரசவித்து கொண்டிருக்கும்.
அந்த எண்ணக் குப்பைகளில் சில நேரம் மாணிக்கங்கள்கிடைப்பதுண்டுஅவ்வாறு கிடைக்கும் மாணிக்கங்களால்மனிதன் சுடர்விட்டு ஒளிர்வதும் உண்டு.
மனிதனின் ஒவ்வொரு செயலும் இதன்கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
இதன் எல்லா எண்ணங்களும் ஒன்றுபோல்இருப்பதில்லை.சீரழிக்கவும்சீர்படுத்தவும் செய்யும்எண்ணங்களை உருவாக்கும் அதிசய கருவி இது.
மகிழ்ச்சியான தருணங்களில் துள்ளி குதிக்கும்காதல்,காமம்பாலியல் உறவுகள் போன்ற விஷயங்களின்போதுகுத்தாட்டமும் போடும்ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்துவிட்டாலோ நோயில் விழுந்து பாயில் படுத்தவனைப்போல கிடக்கும்.
இதனால் உருவாகும் உணர்ச்சிகளுக்கு வடிக்காலாகஇருப்பவன்தான் மனிதன்இன்னும் சொல்லப் போனால்இது கண்ணுக்குத் தெரியாத மாயாவி.
மனிதனின் செயலுக்கு இது பிண்ணனி என்பதுஎல்லோருக்கும் தெரியும்ஆனால்இதை யாரும் குறை கூறுவதில்லை.
வில்லில் இருந்து புறப்பட்டு வந்து அம்பு தாக்கும்போது,தாக்குண்டவர் அம்பின் மீதுதான் கோபம் கொள்கிறாரேதவிரஅது புறப்பட்டு வந்த வில்லின் மீதுகோபப்படுவதில்லைஅதுபோலதான் இது தப்பித்துக்கொள்ளும்.
மனிதனை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்ற இதை ஒருபிக்பாஸ் என்றே கருதலாம்.
இதேவேளையில் இதை எதிர்த்துப் போட்டியிடும் ஆன்மாவின் பலமும் என்ன என்பதை தெரிந்துகொண்டால் இறுதி முடிவு எடுத்து விடலாம்.
ஆகாய விமானத்தில் ரகசிய பெட்டி ஒன்றுவைக்கப்பட்டிருக்குமாம்அதனை பிளாக் பாக்ஸ் என்றுகூறுவார்களாம்வானத்தில் செல்லும் ஆகாய விமானம்ஏதேனும் விபத்துக்குள்ளாக நேரிட்டால்விபத்து நடந்தஇடத்தில் முதலில் தேடப்படுவது இந்த கருப்புப்பெட்டியைத்தானாம்ஏனென்றால்விமானம் எப்படிவிபத்துக்குள்ளானது என்ற தகவல் அதில் துல்லியமாகபதிவாகி இருக்குமாம்அதை வைத்து காரணத்தைக்கண்டுபிடித்து விடுவார்களாம்.
ஒருவகையில் இதுவும் அந்த பிளாக் பாக்ஸைபோலத்தான் செயல்படுகிறது.
மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் எப்படி மனம்காரணமாகிறதோஅந்த செயலின் மூலம் ஏற்படும் சாதக,பாதக நிகழ்வுகளை பதிவு செய்து நேரம் கிடைக்கும்போது,அதை மனிதனுக்கு ரீவைண்ட் செய்து காண்பிப்பதில் இதுமுக்கிய பங்காற்றுகிறது.
மனிதன் பிறக்கும்போதே மனதைபோல் இதுவும்அவனுக்குள் இயங்க தொடங்கி விடுகிறது.
மனதில் தோன்றும் எண்ணம் நல்லனவாக இருந்தால்முதலில் பாராட்டி அதை நிறைவேற்றுவதற்கு உதவுவதுஇதுதான்.
அதே வேளையில் தீய எண்ணம் உருவாகுமானால்முதலில் எச்சரிக்கை மணி அடித்துஅதனால் உண்டாகும்ஆபத்தை உணர்த்துவதும் இதுதான்.
இது நல்ல எண்ணங்கள் உருவாகும்போது மகிழ்ந்துமனதுடன் கை குலுக்கிக் கொள்ளும். இதன் பாராட்டுமழையில் நனையும் மனமும் உடனே மனிதன்மூலம்அதனை வெளிப்படுத்தி அவனுக்கு நற்பெயரை பெற்றுத் தருகிறது.
தவறான எண்ணமாக இருந்தால் மனதுடன் கடுமையானவிவாதம் செய்யும். சிலநேரங்களில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போராட்டமே நடக்கும்இவர்களின்போராட்டத்தால் மனிதனும் மிகுந்த சஞ்சலத்திற்குஆளாகிறான்அந்நேரத்தில் இதன் பேச்சை மனம் கேட்கமறுப்பதோடு அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதில் தீவிரமுயற்சி எடுத்து மனிதனை அதில் சிக்க வைத்து விடுகிறது.இதுவோ வாயடைத்து அமைதியாகி விடுகிறது.
கடவுளுக்கும் இதற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்றநம்பிக்கை ஆன்மிக சிந்தனை உள்ளவர்களுக்குஇருக்கிறதுஅதேபோல் பாவம்சொர்க்கம்நரகம் என்றசிந்தனை உள்ளவர்கள் பெரும்பாலும் இதனை துணையாகஅழைத்துக் கொண்டு இறைவனை நாடுவர்.
இது எனக்குள் இருக்கிறது என்ற உணர்வு இல்லாதநிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வேகத்தின் செயல்பாடு மனம்இதன் செயல்பாடோஅமைதிப் புரட்சி.
எண்ணங்களை பிரசவிப்பதுஅதை நிறைவேற்றுவது எனசெயல்படும் மனம்அடுத்ததொரு புதிய எண்ணம்உருவானவுடன் பழைய எண்ணத்தையோ, அதனால்அடைந்த லாபநஷ்டத்தையோ கணக்கில் எடுத்துக்கொள்ளாது.
ஆனால்இதுவோ மனதின் ஒவ்வொரு எண்ணத்தையும்,அதனால் நிகழும் விளைவுகளையும் தனக்குள் பதியவைத்துக் கொள்ளும்.
மனிதன் துன்பத்திற்குள்ளாகும்போது மனம் கை கழுவிவிடும்இதுவோமனிதனின் இந்த நிலைக்கு நீதான்காரணம்நான் அப்போதே கூறினேன் கேட்கவில்லைஎன்று கூறி தான் பிடித்து வைத்திருக்கும் படத்தைரீவைண்ட் செய்து காண்பித்து தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது என்று உணர்த்தும்.
பூமியை விட்டு பிரியும்போது மனமும்அது இயக்கியமனித உடலும் அழிந்து விடுகின்றனஆனால் இதற்கு அழிவு என்பதே இல்லைஇது இன்னொரு உயிருக்குள்வைக்கப்பட்டு மீண்டும் பிறக்கும் என்கின்றனர் அடுத்தபிறவியை நம்புபவர்கள்.
எல்லா மதங்களும் இதற்கு முக்கியத்துவம்கொடுக்கின்றன.
மரணத்திற்கு பின் இன்னொரு உலகம் உண்டுமனிதனின்ஆன்மா கடவுளின் நியாயத்தீர்ப்புக்காக கடவுளின் முன்புநிறுத்தப்படும்அப்போது அந்த ஆன்மாவின் பதிவுப்படிதீர்ப்பு கிடைக்கும்அதன்பிறகு சொர்க்கமோநரகமோகிடைக்கும் என்ற நம்பிக்கையும் நம்மில் பலரிடம் உள்ளது.
ஆகஇத்தகைய செயல்பாடுகளின் மூலம் மனதை விடஇது அதிக பலம் பொருந்தியதாகவே காணப்படுகிறது.
மனிதன்மனம்ஆன்மா ஆகிய இந்த மூன்றுக்கும்இடையே உருவான போட்டியில் இப்பிறவியை கடந்தும்உயிரோடு இருக்கும் ஆன்மாதான் பிக் பாஸ் என்றமுடிவை நான் எடுத்து விட்டேன்.
வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களைக் கடந்து லாப,நஷ்டங்களை நான் கணக்கிட்டபோது எனக்குள் இருந்தஆன்மாவை கண்டுகொண்டேன்.
என் வாழ்க்கையின் காலகட்டத்தில்நான் நடந்துவந்தபாதையில் பதிவு செய்து வைத்திருந்த எனதுசெயல்பாடுகளும்அவற்றின் மூலம் நான் எத்தகையவன்என்பதை உணர்த்தியதே என் ஆன்மாதான்.
இதன் மூலம் என் மனம் பிரசவிக்கும் எண்ணங்கள்நல்லவையா? தீயவையா என்பதை இப்போது என்னால் உணர்ந்துக் கொள்ள முடியும்.
நான் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனையைஆன்மாவிடம் இருந்து என் மனம் பெற்றுத் தருகிறது.அதன்படி என் ஓட்டத்தை ஓடிக் கொண்டிருக்கிறேன்.
கண் மூடி திறப்பதற்குள் காலம் மிக வேகமாக கடந்துகொண்டிருக்கிறதுஇனி இந்த உலகில் வாழும் நாட்களில்எனக்கான ட்ராக்கில் ஒழுங்காக ஓடி என் ஓட்டத்தைமுடிக்கவே முயற்சிக்கிறேன்.
என் முடிவை தெரிவித்து விட்டேன்.
இனி இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் யார் என்பதைநீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment