முக்கிய செய்திகள்

Monday, July 9, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -9



  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
  6. பாகம் -6   http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
  7. பாகம் -7   http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html
  8. பாகம் -8   http://thanjavursiva.blogspot.com/2012/07/8.html


கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாய் தனியாய் எங்களோடு வாழும் துரதிருஷ்டசாலி என்னருகில். லேசாய் தொண்டையை கனைத்துக் கொண்டு அவரிடம் கேட்டேன், ஏங்க குடும்பமாய் வாழக் கூடாதா என்று. அவ்வளவுதான் . மனிதன் புலம்பித் தீர்த்து விட்டார்.

குடும்பத்தை வைத்துள்ளவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.... விஷம் போல் ஏறிய வாடகை, பிள்ளைகளின் படிப்பிற்கான செலவு, விடுமுறை நாட்களில் வெளியே சென்று வர ஆகும் டாக்ஸி கட்டணம், ஹோட்டலில் சாப்பிடும் ஆகும் செலவு என்று.... பல்முனை தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்....


முன்பு அமீரக அரசாங்கம், திராம் 3,000/- சம்பளம் இருந்தால், உங்கள் குடும்பத்துடன் தங்கி இருப்பதற்கு விசா கொடுத்தது.... பின், அது திராம் 4000/- ஆனது, பின் திராம் 6000/-  இருந்தால் மட்டுமே குடும்பத்துடன் இருக்க முடியும் என்றொரு புது குண்டு போட்டது......


என்ன செய்வது..... இங்கு அவர்கள் வைத்தது தானே சட்டம்.... இஷ்டம் இருந்தால் இரு, கஷ்டமெனில் நாட்டை விட்டு வெளியேறு என்பது தானே அவர்கள் நம்மிடம் மறைமுகமாக சொல்லும் சேதி.....

கொடி பிடிப்பது, அரசாங்கத்தை எதிர்த்து கோஷம் இடுவது, அந்த கும்பலில், கலவரத்திற்கு வழிசெய்வது, அரசாங்க மற்றும் தனியார் வண்டிகளை கொளுத்துவது போன்ற விஷயங்கள் நமக்கு நம்மூரில் வேண்டுமானால் நடக்கலாம்.... இங்கு..... ஹூம்.....மூச்....... நம்மூர் "கட்டதுரை"கள் இந்த ஊரில் இருக்கலாம்.... ஆனால், அவரின் சவடால் செயல்கள் எதுவும் வெளியே தெரியாத அளவு, "கைப்புள்ள"யாகவே உலா வருவார்....

கேளிக்கை பொழுதுபோக்கு எனும் விஷயங்கள் தவிர்த்து, வளைகுடா பற்றியும் அதன் தன்மை பற்றியும்  8 பகுதிகளாக பார்த்து வந்தோம். இது ஒன்பதாவது , இன்னும் ஓரிறு பகுதிகளில் அதையும் சொல்லி நிறைவு செய்ய எண்ணுகிறேன் .

இது வரை வாசித்து வந்த உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.

சரி, துபாய் மிக சிறிய இடம் என்று பதிவில் குற்ப்பிட்டுள்ளீர்கள், பின்னர் எப்படி இத்தனை உலக பிரசித்தி பெற்றது.

இந்த கேள்வியில், வளைகுடாவின் வளர்ச்சி பற்றியும், ஏன் நம்ம ஊர் துபாய் போல இல்லை என்பதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒன்று இரண்டு காரணங்களை பார்ப்போமே.

இந்த அரசின் தொலை நோக்கு பார்வையும், நேர்மையான ஆற்றல் மிக்க செயல் திறனுமே.

நிர்வாகம் ஒரு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் தொழில் போலே நடக்கும். பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகை / கட்டணம் அவர்களுக்கு சேவையாய் சென்றடைகிறதா என்பதில் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்ப்பார்கள். போலீஸ் அற*வே ல*ஞ்ச*ம் வாங்குவ*தில்லை...( ந**ம்மாளுங்க* யாரும் உள்ளூர் போலீஸ் டிபார்மெண்டில் வேலையில் இல்லை....)


எதிலும் உயர்வு, எங்கும் மேன்மை. இதுவே தாரக மந்திரம். இல்லையென்றால் உலகின் உயரமான, உலகின் பெரிய உள்ளரங்கு சந்தை, அல்லது கடலில் மண்ணைக் கொட்டி நிலமாக்கி ப்ளாட் போட்டு விற்போம்*, ஊருக்குள்ள பள்ளம் தோண்டி கடல் தண்ணி திறந்து விடுவோம், கடலுக்குள்ள மூச்சடக்கி போயி பவுண்டேஷன் போடுவோம்!!! அங்க ஒரு 50 மாடியில 7 நட்சத்திர ஓட்டல் கட்டுவோம், போன்ற சுதந்திர சிந்தனை எக்கச்சக்கம். 

இதெல்லாம் என்ன, சொல்லவே இல்லை என்பவருக்கு இத பத்தி விலாவாரியா அடுத்த பகுதியில் சொல்றோம் என வாக்குறுதி தந்து விட்டு மேலே தொடருகிறோம்.

எட்டு  வருசத்துக்கு முந்தி இந்த ஷேக் ஸாயித் ரோட்டில ஒண்ணுமே கிடையாது, இப்போ பாரு எத்தனை பில்டிங்கு, எனும் ஆச்சரிய வாக்கியம் மிக சகஜமாக இங்கு கேட்கும். ஆறு மாசத்தில இவ்வளவு மாறுதலா என வந்தவர் அதிசயிப்பார்.


ஒரு தமாஷ கேளுங்க, "உங்க ஆபிஸ் வரணும், வரைபடம் அனுப்புங்களேன்" என கேட்க "அட போய்யா, ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு புதுசு புதுசா மேப் போட்டு, போதும் போதும்னு ஆச்சு நீயே கண்டு பிடிச்சு வா" என சலித்து கொண்டார். இவருக்கே இப்படின்னா, பாவம் மேப் போட்டு விக்குற கம்பெனி பாடு.

6 லேன்ல எக்ஸ்பிரஸ்வேயா, ஒரு ஆறு மாதம் கொடு, 50 மாடியில காங்கிரீட் பில்டிங்கா, ஒரு இரண்டு வருசம் கொடு என்பது போல கற்பனைக்கு எட்டாத காலத்திட்டம் இங்கு சாஸ்வதம். கட்டுமான பணிகள் எல்லாம் திட்டமிட்ட தேதி, திட்டமிட்ட விதத்தில் இனிதே நிறைவேறும். இல்லையென்றால் அதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.


அமெரிக்கா பெரிதாய் அஞ்சும், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த முக்கிய புள்ளிக*ள், இரண்டு வருடங்களுக்கு முன் துபாய் வந்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததாய் பரவலான ஒரு கிசு கிசு உண்டு.
இந்தியா தேடிக் கொண்டு இருக்கும் ஒரு நிழல் உலக தாதா (தாத்தா அல்ல - அவ*ர் அவ*ரை விட பெரிய கேடி) தன் மகளுக்கு விமரிசையாய் கண்ணாலம் கட்டிக் கொடுத்தது இங்கே தான். எப்ப*டி........

அது எப்படி ஒரே நேரத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நட்பாய் இருப்பது. அது தான், துபாய். தெளிவான சிந்தனை, கடுமையான சட்ட திட்டங்கள் (என்ன தான் தாதா வா இருந்தாலும் இங்க இருக்கச் சொல்ல பச்ச பிள்ள மாதிரி இருக்கணும், இல்லன்னா.....அதான் ஏற்க*ன*வே சொல்லிட்டோமே....)

கோடு கிழிப்பதில் இருக்குது இவர்கள் சூட்சமம். இத கேளுங்களேன். சரக்கு (மது) அடிக்க அனுமதி உண்டு. அதுவும் சில எமிரேட்டுகளில், குறிப்பிட்ட உணவு விடுதிகளில் மாத்திரம். குடிச்சோமா, சத்தம் இல்லாம போனோமான்னு இருக்கணும். இல்லாம சலம்புனீங்க, அவ்ளோதான், தூக்கிக்கிட்டு போயி உள்ள போட்டு, நொங்கி எடுத்து, அப்புறமா ஊர விட்டு நாடு கடத்திருவாங்க அம்புடுதேன்.

புனித ரமலான் மாதத்தின் போது, குடி/சரக்கு எங்கும் தடை செய்யப்படும்.... ஹோட்டல்கள், பார்கள் இந்த சமயத்தில் குடி/சரக்கு சப்ளை செய்யாது... அது போன்றதொரு உத்தரவு அவர்களுக்கு அரசாங்கத்தால் முறையாக முன்கூட்டியே அனுப்பப்படும்....
ஷார்ஜாவில் எப்போதுமே குடி/சரக்கு கிடையாது (பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் கூட)... காரணம், அவர்கள் சவுதி அரேபியாவின் சட்ட திட்டத்தை பின்பற்றுவது தான்....

ஷார்ஜாவில் இருப்பவர் சரக்கு குடிக்க வேண்டுமெனில், இந்த பக்கம் இருக்கும் துபாய்க்க்கோ அல்லது அந்த பக்கம் இருக்கும் அஜ்மனுக்கோ தான் செல்ல வேண்டும்.... வ*ரும்போது போதையில் த*ள்ளாடிக்கொண்டே வ*ர*வேண்டும்.

வண்டிகளின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் விசயத்துல யாவாரத்த பாருங்க, கார் நம்பர் ப்ளேட்டுகள் மற்றும் அதற்கு கொடுக்கப்படும் கொள்ளை விலை...ஒவ்வொரு டிஜிட் குறையும்போதும், நம்பர் ப்ளேட்டின் விலை அதிகமாகும்..
உதாரணமாக 4/5 மாதங்களுக்கு முன் ஒரு டிஜிட் கொண்ட நம்பர் ப்ளேட் அபுதாபி தொழிலதிபர் ஒருவரால் திராம் 27 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி) கொடுத்து எடுக்கப்பட்டது... இது கின்னஸ் சாதனை விலை, ஒரு நம்பர் ப்ளேட்டுக்கு….ப*டிக்கும் போதே சிறு மூச்சு, பெரு மூச்சு எல்லாம் வந்து காது வழியா கரிவண்டி கணக்கா புகை வருதே...

காசு ஜாஸ்தி பண்ணு, ஆனா சேவைய உயர்த்து, இது தான் கொள்கை. டெலிஃபோன் சர்வீஸ் செய்யுறது ரெண்டு பேர், எடிஸாலட் மற்றும் டூ... இந்தியாவிற்கு பேசுவதற்கு மட்டும் கொள்ளை கட்டணம்.... ஏன்னா, இங்க இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்..

சில தொழில் நுட்ப காரணத்திற்காக அமீரக அரசாங்கம், திடீரென அனைத்து டாக்சிகளின் நம்பர் ப்ளேட் நிறத்தை கருப்பு வெள்ளையிலிருந்து, மஞ்சள், கருப்பிற்கு மாற்ற சொல்லியது.... இரு தினங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்களின் நம்பர் ப்ளேட் நிறம் மாற்றப்பட்டுள்ளது.... அதுதான் அமீரகம், மற்றும் அதன் சட்டம் அதை நடைமுறைப் படுத்தும் வேகம்.... இதே நம்மூரில் நடக்குமா?



அடுத்த பதிவு துபாயில் புனித ரமலான் நோன்பு மாதம் !!!!!!!!!!!!!!!!


3 comments:

  1. அரசின் தொலை நோக்கு பார்வையும், நேர்மையான ஆற்றல் மிக்க செயல் திறனுமே..

    பயனுள்ள பகிர்வுகள் !

    ReplyDelete
  2. கருத்துக்களுக்கு நன்றி !!!!!!!!!

    ReplyDelete
  3. ////அதுதான் அமீரகம், மற்றும் அதன் சட்டம் அதை நடைமுறைப் படுத்தும் வேகம்.... இதே நம்மூரில் நடக்குமா?///

    இந்த மாதிரி இந்தியாவில் உருவாக இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ... ஒருவேளை ஆகாமல் கூட போகலாம்...

    ReplyDelete