முக்கிய செய்திகள்

Tuesday, June 12, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -3

பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html



அயல்நாட்டு மோகம் - மத்திய கிழக்கு நாடுகள்-atlantis-hotel.jpg

நம் விசா வந்து விட்டதா இல்லையா என்ற படபடத்த நெஞ்சத்துடன் ஏஜண்டை கேட்ட போது, விசா வந்து விட்டதாக சொன்னதும் மனதார அனைத்து கடவுளுக்கும் நன்றி சொல்லி பயணத்திற்கு தயாராகினேன்.

ஏர்போர்ட் அடைந்து, அங்கிருக்கும் அனைத்து விஷயங்களையும் முடிக்கும் முன் நாக்கில் நுரை தள்ளிவிட்டது. எத்தனை எத்தனை கேள்விகள்... எத்தனை எத்தனை சோதனைகள் .........

அனைத்து சோதனைகளும் முடிந்து, விமானம் உள்ளே ஏறி அமர்ந்ததும், கண்ணில் அவனை அறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

இப்போது அயல்நாடு போனால், தன் சுற்றம், சூழத்தை பார்க்க, எப்போது திரும்பி வருவோமோ?? என்றெல்லாம் எண்ணியது மனது.

விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பியது. சொசுசான விமான பயணம். வண்டி போற மாதிரியே தெரியலையே நம்ம ஊரு பல்லவன் பஸ் 40 கிலோமீட்டர்ல போற போது எப்படி இருக்கும். தூக்கி தூக்கி போடும், சிவ்வுன்னு காத்து அடிக்கும். ஆனா, இது 400 கீமி வேகத்திலே போனாலும் ஒண்ணுமே தெரியலையே... ஒரு சத்தம். வயித்து வலி வந்தா முச்சு பிடிச்சு விடுற மாதிரி ஒரே முக்கல்.... அதே முக்கல்தான் கடைசிவரை.

வந்து இறங்கி தலை நிமிர்த்தி பார்த்தால் என்ன இது, விமான நிலையமா இல்லை இது தான் சொர்க்கபுரியா??. ஆச்சரியத்தில் விரிந்த வாயில், ஒரு நூறு ஈ போய் வந்தால் கூட தெரியாது. என்ன ஒரு வாசனை, சுத்தம் என்று நாட்டின் மதிப்பை இந்த இடத்தை வைத்து மனம் எண்ணி கொள்ளும்.

நாம் அதிர்ஷ்டசாலி என்று உள்ளுணர்வு கூக்குரல் இடும். மிக உயர பறந்து வந்ததால் காது லேசாய் அடைத்து, வயிறு லேசாய் குழம்பி, அசதி சேர்ந்து உடல் சற்று அவஸ்தையாய் இருக்கும்..

புரியாத மொழி, மனிதர்கள், நடப்புகள் என்று எத்தனை படித்தவர் ஆனாலும் சிறு பிள்ளை போல் திருவிழா கூடத்தில் தொலைந்த தோரணையில் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.

சவுதி அரேபியா அளவு (போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனை)இல்லையென்றாலும், துபாயிலும், போதை மருந்து வைத்து இருந்தாலோ, கடத்தினாலோ, பெருங்குற்றம். ஆயுள் தண்டனை நிச்சயம் (நம்மூர் போல் 14 வருடங்கள் இல்லை, இங்கு ஆயுள் தண்டனை என்பது 25 வருடங்கள்).

முதல் அதிர்ச்சி, மத்திய கிழக்கு நாடுகளின் வெப்பம் தான். வெயில் காலத்தில் வந்து இறங்கும் அத்தனை பேருக்கும் இந்த அதிர்ச்சி உண்டு. இத்தனை சூடும், இதனை பளீர் என்று சூரியனும் நாம் பார்த்திராதது. கண்கள் இந்த பளீர் ஒளி கண்டு அனிச்சையாய் மூடி கொள்ளும். தோல் இந்த சூடு பார்த்து லேசாய் சொரியும். இந்த அசௌகரியங்களையும் மீறி ஊரின் பணம் பளபளப்பு தெரியும்.

வழுக்கி ஓடும் சாலைகள் மிக பறந்து விரிந்து பிரமாண்டமாய் இருக்கும். இது தாரில் செய்த ரோடா அல்லது பளிங்கில் செய்ததா. ஒரு குண்டு, குழி இல்லையே?? இங்கேயே இல்லை விரித்து, கல்யாண பந்தி போடலாமே??

மிக நேர்த்தியான கார்கள். நம் ஊரில் சொகுசு கார் என்று நாம் சொல்லிய டப்பா வண்டிகள் (கரகாட்டக்காரன் படத்தில் வருவது) போல் இல்லை. ஆடாமல் அசையாமல் படகு போல் மிதந்து செல்லும் குளு குளு வண்டிகள்.

அயல்நாட்டு மோகம் - மத்திய கிழக்கு நாடுகள்-emirates-palace-hotel.jpg


இங்கு ஓடும் வண்டிகளில், ஜப்பான் வண்டிகளுக்கே முதலிடம்.. நல்ல வண்டிகளாக இருந்தாலும், ஐரோப்பிய வண்டிகளின் விலையும், ஓடும் எண்ணிக்கையும் குறைவே. இல்லை என்று சொல்லமால் நம் ஊர் பியட் கார் ஒன்று ஐந்து வருடத்திற்கு முன்னால் ஓடி கொண்டு இருந்தது.. இப்போது அது இல்லை. மஹிந்திரா, ஹுண்டாய் வண்டிகள் சொற்ப அளவில் ஓடுகிறது.

ஒட்டு மொத்த துபாயை பார்த்தால், மிக மிக சிறிய ஊர்தான். சென்னையின் டி.நகர் (T.NAGAR) அளவுதான் இருக்கும்.. இதை படிக்கும் போது, மிகைப்படுத்திய வாக்கியம் என்று நினைக்க வேண்டாம்.

எங்கெங்கு காணினும் ஒருவர் மட்டுமே ஒட்டி செல்லும், படகு கார்கள். ஏனெனில், இங்கு பெட்ரோல் விலை, குடிநீர் விலையை விட குறைவு. பஸ்கள் குறைவு, சாமான்கள் ஏற்றி செல்லும் வாகனங்களும் குறைவு. நகரத்தின் சாலை நெரிசலுக்கு இதுவும் ஒரு காரணம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், சாலை விஸ்தரிப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது.

சரி, சாலை வழி கடந்து, தங்குமிடம் வந்து சேர்ந்து விட்டோம். என்ன, அந்த பிரம்மாண்டம் மட்டும் இன்னும் மனதிலும், கண்ணிலும் தேங்கி இருக்கிறது.

இங்கே என்ன !! .............
(தொடரும்.........)

No comments:

Post a Comment