முக்கிய செய்திகள்

Monday, March 19, 2012

உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி?

மனைவியிடம் நல்லபேர் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லீங்கோ! அதுக்கு அசாத்தியமான திறமை + பொறுமை இதெல்லாம் அவசியம்! ”ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுவது மாதிரி” அப்டீன்னு நீங்க கருதினால், இந்த ரிஸ்க்கை நீங்கள் எடுத்துப் பார்க்கலாம்! இல்லை இது கஷ்டம்னு தோணிச்சுதுன்னா, “ எனக்கு நல்லபேரே வாணாம்! ஆளைவிடுடா சாமி” அப்டீன்னு பேசாம கம்முன்னு இருக்கலாம்!
ஆனா ஒண்ணு “ உங்களைக் கட்டி நா என்ன சுகத்தைக் கண்டேன்” அப்டீங்கற வாக்கியத்த நீங்க மணிக்கொருமுறை கேட்டுக்கிட்டே இருக்கவேண்டியதிருக்கும்! ஹி ஹி ஹி ஹி ஹி அதற்குத் தயாராக இருங்கோ! :-)
01. உங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்க முதலில் என்ன செய்யணும் தெரியுமா? - கல்யாணம் பண்ணணும்! நீங்க கல்யாணம் பண்ணினாத்தான் உங்களுக்கு ஒரு மனைவி கெடைப்பாங்க! அப்புறம் தான் நீங்கள் நல்ல பேர் வாங்குவது பற்றி சிந்திக்க முடியும்! :-)
02. கல்யாணம் பண்ணின புதுசுல, உங்களுக்கு கண்டிப்பா நல்ல பேர் இருக்கும்! வேளாவேளைக்குச் சாப்பாடு கெடைக்கும்! லேசா தலைவலிக்குதுன்னு சொன்னாலே, “ அச்சச்சோ என்னங்க இப்புடி அசால்டா சொல்றீங்க? இந்தாங்க மாத்திரை எடுத்துக்கோங்க! இந்த காப்பிய குடியுங்க! அதெல்லாம் சரியாகிடும்” அப்டீன்னு தேன் சொட்டும் வார்த்தைகள் வந்து விழுகும்! ஹி ஹி ஹி ஹி ஹி !!
அன்பான ஆண்வர்க்கமே , நாம ஏமாந்து போகும் முக்கிய இடமே இதுதான்! இந்தக் கவனிப்பும் , அன்பும் உங்களுக்கும் காலம் முழுக்க நீடிக்கும் அப்டீன்னு கனவு காணாதீங்க! இந்த நிலைமை சட்டுன்னு மாறும்! “ நீயெல்லாம் ஒரு ஆம்பளையாய்யா?” அப்டீங்கற கேள்வி, தூரத்துல லாரில வந்துகிட்டு இருக்கு அப்டீங்கறத மறக்க வாணாம்! :-))))))))))))
03. அப்புறம் முக்கிய விஷயம்! - உங்க மனைவிக்கு எது புடிக்கும்? எது புடிக்காது அப்டீன்னு நீங்க அறிஞ்சு வைச்சிருக்கணும்கற அவசியமே கெடையாதுங்க! ஆனா, எதிர்வீடு, பக்கத்து வீடு, பின் வீடு இந்த மூன்று வீடுகளையும் அடிக்கடி கவனிச்சுக்கணும்! எதிர்த்தவீட்டுல புதுஷா ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கியிருக்காய்ங்களா? அதை நீங்க பார்த்துட்டீங்களா? உடனே நீங்க வாலண்டரியா உங்க சம்சாரம்கிட்ட போயி, “ தோ பாரு நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே, இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நம்மளும் ஸ்கூட்டி பெப் வாங்கிடலாம்” அப்டீன்னு அட்வாஸா சொல்லிடணும்! நல்ல பேர் கண்டிப்பா கெடைக்கும்!
“ ஏங்க நா உங்ககிட்ட பைக் வாங்கிக் குடுங்கன்னு கேட்கவே இல்லையே?” அப்டீன்னு அவ கேட்கத்தான் செய்வா! பட் நீங்க அதுக்கெல்லாம் ஏமாந்து போகக்கூடாது!
” இல்ல மா உனக்கும் ஒரு பைக் இருந்தா சௌரியமா இருக்கும்ல” அப்டீன்னுதான் சொல்லணுமே தவிர,
“ சரி சரி உனக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடலாம்” அப்டீன்னு முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்பட்டு சொன்னீங்க, அவ்ளோதான்! ஏன்னா அவங்க ஒரு அஸ்திரம் வைச்சிருப்பாங்க
“ சரி நீங்க இவ்ளோதூரம் கெஞ்சினதுக்கு அப்புறமும் பைக் வாங்கலைன்னா உங்க மனசு சங்கடப்படும்” அப்டீன்னு அவங்க சொல்லுவாங்க!
“ என்னது நா கெஞ்சினேனா? “ அப்டீன்னு உங்களுக்கு கேட்கத் தோணும்! ஆனா அதை ஓபனால்லாம் கேட்கப்படாது! வேணும்னா மனசுக்குள்ள மட்டும் கேளுங்கோ! :-))))))))
04. இந்த பைக் தத்துவத்தை நீங்க சேலை, நகைகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற ஏனைய பொருட்களிலும் கடைப்பிடிக்கணும்! மறுபடியும் சொல்றேன்! உங்களுக்கு மிகப்பெரிய வில்லன்களே இந்த பக்கத்து வீட்டுக்காரங்கதான்! அவங்க வீடு பாசி புடிச்சுப் போயி, மங்கலா இருந்தா நீங்க உங்கவீட்டுல நிம்மதியா இருக்கலாம்! மாறாக அவங்க வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்குறாங்கன்னு வைச்சுக்கோங்க! அப்புறம் என்ன அடுத்த 15 நாளில உங்க வீட்டுக்கும் பெயிண்ட் அடிக்கணும்! இல்லைன்னா, உங்க வீட்டு சுவர் மங்கிப்போகுதோ இல்லையோ, உங்க நல்ல பேர் மங்கிப் போய்டும் சொல்லிட்டன்!

05. உங்க மனைவி தன்னோட உறவுக்காரங்க பத்தி, உங்கிட்ட குறை நிறைகள் சொன்னா, அதெல்லாத்தையும் கேட்டுட்டு கம்முன்னு கெடக்கணும்! மாறாக, வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்
“ ஆமா, இவ்ளோவிஷயம் நடந்திருக்காக? ஏன் உன்னோட சித்தப்பாக்காரன் இப்புடி இருக்கான்?” அப்டீன்னு கேட்டீங்க! அவ்ளோதான்! உங்க நல்ல பேரு டேமேஜ் ஆகிடும்!
“ எதுக்கு இப்ப அவர தப்பா பேசுறிங்க? என்ன இருந்தாலும் அவரு குடும்பத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறார் தெரியுமா?” அப்டீன்னு பிட்ட மாத்திடுவாங்க! - அதாக்கப்பட்டது, அவங்களோட உறவுக்காரங்க பத்தி அவங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க! ஆனா நீங்க ஒரு வார்த்தைகூட சொல்லிடக் கூடாது! இதுதான் ஒரு நல்ல புருஷனுக்கு அழகு! ஓகே வா?
06. ஹி ஹி ஹி ஹி ஹி இதே தத்துவத்தை நீங்களும் கடைப்பிடிக்கலாம்னு நெனைக்காதீங்க! கண்டிப்பா ஏமாந்துடுவீங்க! இப்போ உங்க சைடு உறவினர்களோட குறை நிறைகள் பத்தி, உங்க மனைவிகிட்ட ரெண்டு வார்த்தை சொல்லிப் பாருங்க!
“ ஆமா உங்க சொந்தக்காரங்கல்ல! அப்புடித்தான் இருப்பாய்ங்க! அதான் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே” அப்டீன்னுதான் பதில் வரும்! ஹி ஹி ஹி ஹி ஹி உடனே இந்த இடத்தில், அப்பாவிக் கணவர்களாகிய நீங்கள்
“ இப்ப எதுக்கு அவங்கள பத்தி தப்பா பேசுறே” அப்டீன்னு கேட்டுத் தொலைச்சுடாதீங்க! உடனே,
“ ஆமா, நா எது பேசினாலும் இவருக்கு தப்பாத்தான் தெரியுது! நானும் கொஞ்ச நாளா நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன்! உங்க போக்கே சரியில்ல” அப்டீன்னு விஷயம் வேற பக்கம் டைவர்ட் ஆகிடும்! இத கேட்டு உங்களுக்கு செம அதிர்ச்சியாவும், கடுப்பாகவும் இருக்கும்! ஆனா என்ன பண்ண முடியும்? “ ஆணாகப் பொறந்து தொலைச்சுட்டோமே” அப்டீன்னு நெனைச்சுக்கிட்டு பேசாம கம்முன்னு கெடக்கணும்!

மறுபடியும் சொல்றேன்! பல விஷயங்கள மனசுக்குள்ளாரதான் நினைக்கணுமே தவிர, வாயத்தொறந்து வெளியே கொட்டக் கூடாது! :-)))
ஒரு வார்த்தை விட்டீங்க, ஜென்மத்துக்கும் அந்த வார்த்தைய உங்களால மீளப் பெறமுடியாது” உங்க மனைவியோட வாய நீங்க அடைச்சா, உங்க வாழ்க்கையே இருண்டு போய்டும்! அவ்ளோதான்!
ஸோ, பெண்களின் மனதினைப் புரிந்துகொண்டு நடப்பதென்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதுமான விஷயமும் ஆகும்! - இந்தப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாத ஆம்பளைங்கதான் “ பெண் ஒரு புதிர் என்றும், பெண்ணின் மனசு ஆழம் என்றும்” புலம்பிக்கொண்டு திரிவாய்ங்க! ஆனால் கொஞ்சம் உளவியல் + வாழ்வியல் தெரிஞ்சா, பெண்களைப் புரிந்துகொள்வது சிரமமே அல்ல!
 


2 comments:

  1. ஆமா,,,உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா...அனுபவமா...இதெல்லாம்?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ! கொஞ்சம் அனுபவம் !! மீதி கேட்டதும் படித்ததும் !!!!!

      Delete